WHAT’S HOT NOW

ads header

நயினாதீவு செய்திகள்

Theme images by kelvinjay. Powered by Blogger.

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

மரண அறிவித்தல்

எம்மைப்பற்றி

அன்பார்ந்த நயினை வாழ் உறவுகளே... அன்பார்ந்த நயினை புலம் பெயர் உறவுகளே... நயினைப் பற்றாளர்களே.... நயினை மண்ணில் இடம் பெறுகின்ற அனைத்து சமபவங்கள்,நிகழ்வுகள்,ஆலய திருவிழாக்கள் என்பவற்றின் கணணிஒளியினை எமது முகப்புத்தகத்தில் பார்வையிட முடியும்.. நம்மூரின் நிகழ்வுகளை நாளுக்கு நாள் பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் இணையுங்கள். நயினை மண்ணில் இடம் பெறும் அனைத்து சிறப்பு நிகழ்வு களையும் எம் முகப்புத்தகத்தின் ஊடாக உடனுக்குடன் பார்வையிட முடியும். நன்றி. நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல், நயினை நட்சத்திரச் செய்தி nainativu starnews தொடர்புக்கு - nainativustarnews@gmail.com

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய கொடியேற்ற திருவிழா ! ! ! 2014 (வீடியோ பதிவு)

அலைகடல் தழுவும் அன்னை ஸ்ரீ நாகபூஷணி அம்மனுக்கு, பல்லாயிரக் கணக்கான அடியவர்கள் புடை சூழ கொடியேற்றத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.....




வீடியோ - Nainai Waran அவர்கள்


நன்றி.

அன்னையின் பாதம்பணிந்து

நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,

நயினை நட்சத்திரச் செய்தி,



நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய கொடியேற்ற திருவிழா ! ! ! 2014 (படங்கள் இணைப்பு)

பல்லாயிரக்கணக்கான அம்பிகை அடியவர்களின் அரோகராக்கோசத்ததுடனும் ஆலய காண்டா மணி ஒலிக்க மேளதாளங்கள் முழங்க  நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய உட்சவகால குருமணியால் கொடியேற்றப்பட்டது.





















படங்கள் முகப்புத்தக நண்பர்கள்

ஏனைய படங்களைப் பார்வையிட கீழ் உள்ள படங்களை அழுத்தி பார்க்கவும்.
படங்கள் Nainai M Kumaran அவர்கள்
...
நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,

நயினாதீவு-அரசினர் வைத்தியசாலைக்கு முதல் தடவையாக வந்திறங்கிய அம்புலன்ஸ் வாகனம் !

நயினாதீவு அரசினர் வைத்தியசாலைக்கு நீண்டகாலமாக அம்புலன்ஸ் வாகனம் வழங்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்றைய தினம் 27.06.2014 நயினாதீவு வைத்திய சாலைக்கு வழங்கப்பட்டது.



நயினாதீவு அரசினர் வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி டாக்டர் சர்வானந்தா அவர்களின் விடா முயற்சியால் வெற்றியளித்துள்ளது.

இவரின் சேவை மென்மேலும் நயினாதீவு மண்ணுக்கு தொடர நயினாதீவு மக்கள் சார்பாக வாழ்த்துகின்றோம்.

படம்.Nainai M Kumaran

நன்றி.
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய உயர்திருவிழா தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடல்! (படங்கள்)

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உயர் திருவிழா எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அங்கு வரும் பக்தர்களுக்கான சகல வித தேவைகளையும் தங்குதடையின்றி வழங்க அனைத்துத் தரப்பினரும் நேற்று நயினாதீவில் கூடி ஆராய்ந்துள்ளனர்.



இதில் பிரதேச செயலகம், பிரதேச சபை, காவல்துறை, கடற்படை, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை, வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி அபிவிருத்தித் திணைக்களம், குறிகாட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையில் பயணிகள் படகுச் சேவையில் ஈடுபடும் படகு உரிமையாளர்கள் மற்றும் ஆலய அறங்காவலர்கள் எனப் பலதரப்பட்டோர் கலந்து கொண்டனர்

இக் கலந்துரையாடலில் வருடா வருடம் நடைமுறைப்படுத்தப்படும் அனைத்துத் தேவைகளும் இந்த வருடமும் எதுவித தடையுமின்றி அமுல்படுத்தப்படும் என அனைத்துத் தரப்பினராலும் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், குறிகாட்டுவானுக்கும் நயினாதீவுக்கும் இடையில் பயணிகள் சேவையில் ஈடுபடும் பாதைக்கும் படகுகளுக்கும் இடையில் உள்ள நேரத்தை ஒழுங்குபடுத்துமாறு படகு உரிமையாளர்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதேவேளை படகு உரிமையாளர்கள் கடற்படையினருடன் இணைந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கடற்படைத் தரப்பால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதேநேரம் பச்சை குத்துபவர்களுக்கு இங்கு அனுமதி இல்லை எனவும் இவ்வாறு பச்சை குத்திக் கொள்வதால் நோய்த் தாக்கம் ஏற்படுவதாகவும் தெரிவித்த பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள், இதற்கு பொலிஸ் தரப்பு தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

இதேவேளை கடந்த காலங்களை விட இவ் வருடம் சுகாதாரம், குடிநீர் போன்ற மக்களின் அத்தியாவசிய தேவைகள் சிறப்பான முறையிலும் வெகு விரைவாகவும் முன்னெடுக்கப்படும் என வேலணை பிரதேச சபை தவிசாளர் தெரிவித்தார்.








மேற்படி கலந்துரையாடல் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய கேட்போர் கூடத்தில் 04.06.2014  நண்பகல் 12 மணியிலிருந்து பிற்பகல் 2.30 மணிவரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


நன்றி.
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,


நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய 2014ம் ஆண்டு (ஐய வருடம்) உயர் திருவிழா விஞ்ஞாபனம்.


வரலாற்று சிறப்பு மிக்க நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உயர்திருவிழாவானது இன்றைய சாந்தி நிகழ்வுடன் நாளை (28.06.2014) சனிக்கிழமை ஆரம்பமாகின்றது.

அம்பிகை அடியவர்களே அம்பிகையின் உயர்திருவிழாவில் கலந்து கொண்டு அம்பிகையின் அருளாசினை பெற்று உய்யும் வண்ணம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.





அத்துடன் அம்பிகை மெய்யடியார்களே அம்பிகையின் உயர்திருவிழா அருட்காட்சிகளினை பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் (Nainativu Starnews)இணைந்திருங்கள்..

முக்கிய குறிப்பு:- 

அம்பிகை மெய்யடியார்களே!!!
அம்பிகையின் பெயரால் ஏமாற்றும் பேர்வழிகள் எவரிடமும் எக் காணிக்கைகளினையும் வழங்க வேண்டாம் என அம்பிகை அடியவர்களினை தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றனர் ஆலய அறங்காவல சபையினர்.

அமுதசுரபி அன்னதானசபையினர் உற்சவ காலத்தில் சிறப்பாக இவ்வாண்டும் அன்னதானப்பணியினை மேற்கொள்வதாகவும் அறிவுத்துள்ளனர்.

அன்னையின் அருள் பெற அடியவர்கள் அனைவரும் வருக ! 


நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,