WHAT’S HOT NOW

ads header

நயினாதீவு செய்திகள்

Theme images by kelvinjay. Powered by Blogger.

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

மரண அறிவித்தல்

எம்மைப்பற்றி

அன்பார்ந்த நயினை வாழ் உறவுகளே... அன்பார்ந்த நயினை புலம் பெயர் உறவுகளே... நயினைப் பற்றாளர்களே.... நயினை மண்ணில் இடம் பெறுகின்ற அனைத்து சமபவங்கள்,நிகழ்வுகள்,ஆலய திருவிழாக்கள் என்பவற்றின் கணணிஒளியினை எமது முகப்புத்தகத்தில் பார்வையிட முடியும்.. நம்மூரின் நிகழ்வுகளை நாளுக்கு நாள் பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் இணையுங்கள். நயினை மண்ணில் இடம் பெறும் அனைத்து சிறப்பு நிகழ்வு களையும் எம் முகப்புத்தகத்தின் ஊடாக உடனுக்குடன் பார்வையிட முடியும். நன்றி. நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல், நயினை நட்சத்திரச் செய்தி nainativu starnews தொடர்புக்கு - nainativustarnews@gmail.com

அருள்மிகு ஶ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் பிற்போடப்பட்டுள்ளமை பற்றிய அறிவித்தல் 2021


அருள்மிகு ஶ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் பிற்போடப்பட்டுள்ளமை பற்றிய அறிவித்தல் 

நேற்றைய தினம் 16.06.2021 புதன் கிழமை 

ஆலய அறங்காவல சபையினரால் பூரண விளக்கத்துடன் உதயன் பத்திரிகையில் அறியப்படுத்தப்பட்டள்ளது.

நாட்டில் நிலவும் அதீத நோய் தாக்கத்தால் அம்பிகையின் மகோற்சவம் 10 பேருடன் மட்டுமே  நடாத்த அனுமதிக்கப்பட்டதாகவும் அம்பிகையின் உட்சவம் 10 அடியார்களுடன் நடாத்துவது என்பது அசாத்தியமான விடையம் எனவும் அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட அரசாங்க மாவட்ட அதிபரின் ஒருங்கிணைக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய நடாத்தப்பட வேண்டியது விதியாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

10.06.2021 தொடக்கம் 25.06.2021 வரை 16 தினங்களும் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று 10 இற்கு மேற்படாத ஆலய ஊழியர்களுடன் உள்வீதி வலம் வர திருவருள் கைகூடியுள்ளது என்பதனை உலகெங்கும் பரந்து வாழும் அம்பிகை அடியார்களுக்கு அறியப்படுத்தியுள்ளார்கள்.

இவ் ஏற்பாடு கூட இறுக்கமான சுகாதார விதிமுறைகளின் கீழ் இடம்பெறுகின்றது எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

அம்பிகை அடியவர்கள் வீட்டில் இருந்தே அம்பாளை வழிபாடு செய்யும் வண்ணம் வேண்டிநிற்கிறார்கள்.



நயினாதீவு அருள்மிகு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் தேவஸ்தான வருடாந்த திருக்குளிர்த்தி பொங்கல் வேள்வி விழா விஞ்ஞாபனம் - 2017


நயினாதீவு அருள்மிகு தில்லைவெளி ஸ்ரீ பிடாரி அம்பாள் தேவஸ்தான வருடாந்த திருக்குளிர்த்தி பொங்கல் வேள்வி விழா விஞ்ஞாபனம் - 2017

02.06.2017  கும்பஸ்தான நிகழ்வுடன் ஆரம்பம்.

09.06.2017  யாழ்நகரில் இருந்து விநாயகப்பானை எடுத்துவரல்.

10.06.2017  வேள்வி விழா.


நயினாதீவு ஸ்ரீ பிடாரி அம்பாள் அன்னதான சபையினரால் 02.06.2017 தொடக்கம் 10.06.2017 வரையும் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் நயினாதீவு ஸ்ரீ பிடாரி அம்பாள் கூட்டுப்பிரார்த்தனை சபையின் வருடாந்த பரிசளிப்பு விழாவும் கலை நிகழ்வும் இடம்பெறும்.


முக்கிய குறிப்பு : எம் பெருமாட்டியின் வேள்வி விழா சிறப்பாக நடைபெற நயினை வாழ் சைவ அடியார்கள் வதியும் இல்லந்தோறும் அன்னையின் அடியார்கள் காணிக்கைப் பொருட்களை ஏற்றுக்கொள்வதற்காக பவனிவருவார்கள். எனவே தாங்கள் தங்களால் இயன்ற காணிக்கை பொருட்கள், பழவகைகள், பிஷேகபொருட்கள், தேங்காய், இளநீர் என்பனவற்றை வழங்கலாம் என்பதனை அறியத்தருகின்றோம்.

"தாயே ஆகி வளர்த்தனை போற்றி
போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே போற்றி"

                  இங்கனம்
ஆலய பரிபாலன சபையினர்



நன்றி.
நயினை மண்ணின் சமயத்துறையின் வலம்..
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,

நயினை நட்சத்திரச் செய்தி,

கந்தன் கருணை புரியும் கந்தசஷ்டி விரதம் ! ! ! 31.10.2016 - 05.11.2016


எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம்.

குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள். முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.

முருகன் கோயில் உள்ள எல்லா இடங்களிலும் கந்த சஷ்டி விரதம் ஒரு பெருவிழாவாக நடக்கும். ஆறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்ச்சோலையிலும், இலங்கையில் நல்லூர், சன்னிதி, கதிரமலை(கதிர்காமம்),மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்களிலும் மிகவும் சிறப்பாக இவ்விழா நடைபெற்று வருகின்றது.

இந்த வருடம் 31.10.2016 முதல் 05.11.2016 வரை விரதம் கடைப்பிடித்து, 06.11.2016 பாரணையுடன பூர்த்தி செய்வர்.

கந்த சஷ்டி விரத முறை

விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று.

கேதாரகௌரி விரதம் பூர்த்தி செய்து கந்த சஷ்டி விரதம் பிடிப்போர், காலையில் நீராடி பூசை முடித்துத் தீர்தத்தை உட்கொண்டு அதன் பின் கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்கவும்.

ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் இவ்விரதத்தை தம் உடல் நிலைக்குத் தக்கதாக கடைப்பிடிப்பர். சிலர் ஆறு நாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், பலர் முதல் ஐந்து நாட்களும் ஒரு நேரம் உணவு உண்டு (பாலும் பழமும்) கடைசி நாளான ஆறாம் நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும் ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் பாரணை மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.

கந்த சஷ்டி விரதத்தில் படிக்க வேண்டியவை

இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் படித்தால், என்னவென்று சொல்ல முடியாத மனஅமைதி நிலவும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.

கந்தசஷ்டி விரதத்தின் பலன்

குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்.

யாழ் - மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான மஹா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விஞ்ஞாபனம் - 04.09.2016


நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய இரதோற்சவ திருவிழா 2016 (படங்கள் இணைப்பு)










நயினாதீவு புத்தர் சிலை விவகாரம் – இனவாதம் கிளப்பும் தென்னிலங்கை ஊடகங்கள்


நயினாதீவில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் அனுமதியின்றி, அமைக்கப்பட்டு வந்த, 75 அடி உயர புத்தர் சிலையை அமைக்கும் பணிகளை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இடைநிறுத்திய விவகாரத்தை, சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இனவாத நோக்கில் பரப்புரை செய்து வருகின்றன.
நயினாதீவு நாகதீப விகாரைக்கு முன்பாக, 120 மில்லியன் ரூபா செலவில், 75 அடி உயர புத்தர் சிலை ஒன்றை அமைக்கும் பணிகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
சிறிலங்கா கடற்படையின் உதவியுடன், நாகதீப விகாரையின் விகாராதிபதி இந்த பாரிய புத்தர் சிலையை அமைக்கும் பணிகளை முன்னெடுத்து வந்தார்.
கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சிலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்தும்படி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகதீப விகாரையின் விகாராதிபதிக்கு கடிதமூலம் அறிவித்திருந்தார்.
இதனைக் கண்டித்த விகாராதிபதி இது ஒரு சதித்திட்டம் என்றும் இதற்குப் பின்னால் மறைமுகமான அரசியல் கரம் ஒன்று இருப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
நயினாதீவு விகாரையை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகளை வடக்கிலுள்ள தீவிரவாதிகள் பல ஆண்டுகளாகவே குழப்பி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயத்தில் சிறிலங்கா அதிபரும், பிரதமரும் தலையிட்டு, புத்தர் சிலையை அமைப்பதற்கு அனுமதி பெற்றுத் தர வேண்டும் என்றும், அவர் நயினாதீவு சென்றிருந்த ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக, மற்றும் பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான ஆகியோரிடம் கோரியிருந்தார்.
சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இந்த விவகாரத்தை இனவாதக் கண்ணோட்டத்துடன் பரப்புரை செய்து வரும் நிலையில், நயினாதீவில் புத்தர் சிலையை அமைப்பதை இடைநிறுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் பெரேரா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்மைய ஊடகச் செய்திகள் தவறானவை என்று குறிப்பிட்டுள்ளார்.
புத்தர் சிலையை அமைப்பதற்கு, கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் அனுமதியை வழங்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நயினாதீவு கணேச சனசமுக நிலையம் நடாத்திய சமய பாடப்பரீட்சை முடிவுகள் - 2016